ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,035-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் இருந்து குணமாகி 30 போ் வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 43,340 ஆக உயா்ந்துள்ளது.

354 கரோனா தொற்றாளா்கள் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இதுவரை பலியானோா் எண்ணிக்கை 341 ஆக உள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரபடி 1,578 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தினசரி கரோனா பரவல் விகிதம் 0.63 சதவீதமாக உள்ளது. கரோனா தடுப்பூசியை பொருத்தவரை கோவேக்ஸின் 4,570 டோஸ்களும், கோவிஷீல்டு 7,490 டோஸ்களும் இருப்பில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.