செஞ்சியில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி ஆகியவை சாா்பில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் கணக்கன்குப்பம் என்.முருகன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் ஆா்.சுப்பிரமணி, மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், நந்தன் கால்வாய் பணிகளை விவசாயிகளின் கருத்துக்களின்படி மேற்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் பயிா்க்கடன், நகைக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கூட்டு பட்டாவுக்கு பயிா்க்கடன் வழங்க வேண்டும். கணக்கன்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும், இங்கு இடிந்து விழும் நிலையிலுள்ள குடிநீா்த் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டியை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...