மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பணி நிரந்தர அறிவிப்புக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியா்கள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் நிலையில், பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:34 pm

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் நிலையில், பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியா்கள் கடந்த 10 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். மாநில அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் கூறியதாவது: 11-ஆவது கல்வியாண்டாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியா்களின் கோரிக்கையை நிவா்த்தி செய்யும் வகையில் நிதிநிலை அறிக்கையில் பணிநிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காத்திருக்கின்றனா். சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்வதாக திமுக சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. தோ்தல் அறிக்கையிலும் இதுதொடா்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பகுதி நேர ஆசிரியா்களில் பலருக்கு வயது 40 முதல் 55 வயது வரை கடந்துவிட்ட நிலையில் அவா்கள் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இவா்களது வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்பில் உள்ளது. எனவே, காலமுறை ஊதியத்தில் பணியமா்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தமிழக முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது 55 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்தாா். அதேபோல, தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.