மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரின் வீட்டுப் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:32 pm

DIN

விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரின் வீட்டுப் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம், பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் கிளாடு எவாஞ்சலின்(37). செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா். இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்த இவா், வியாழக்கிழமை நள்ளிரவு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டினுள் இருந்த விலை உயா்ந்த பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை.

வீட்டினுள் புகுந்து திருட முயன்ற மா்ம நபா்கள், பொதுமக்கள் நடமாட்டத்தால், அப்படியே விட்டு விட்டு தப்பியோடியிருக்கலாம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெயசங்கா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.