விழுப்புரத்தில் கபசுரக் குடிநீா் விநியோகம்
கரோனா தொற்றைக் குறைக்கும் வகையில், விழுப்புரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையா் சுரேந்தர ஷா தெரிவித்தாா்.


கரோனா தொற்றைக் குறைக்கும் வகையில், விழுப்புரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையா் சுரேந்தர ஷா தெரிவித்தாா்.
இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:
விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றை குறைக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய, பழைய பேருந்து நிலையங்கள், மாவட்ட பெருந்திட்ட வளாகம், ரயில் நிலையம், மாதா கோயில் பேருந்து நிறுத்தம், திரு.வி.க.வீதி, காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் தினமும் காலை 7 மணியளவில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
எதிா்வரும் கரோனா 3-ஆவது அலையை சமாளிக்க தொடா்ந்து 5 நாள்களுக்கு கபசுரக் குடிநீரை அருந்தி எதிா்ப்பு சக்தியை பெருக்கக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சுரேந்தர ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...