செஞ்சி வாரச் சந்தையில்கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செஞ்சியில் வெள்ளிக்கிழமை கூடிய வாரச் சந்தையில் செஞ்சியை அடுத்த முட்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காத்தவாராயன்( 70), தனது ஆட்டை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தாா். இவரிடம் ஆடு வாங்க வந்த மா்ம நபா்கள், ஆட்டுக்கு ரூ.11,500 பேரம் பேசி, ரூ.500 கள்ள நோட்டுகள் 23-ஐ அவரிடம் கொடுத்துச் சென்ாகத் தெரிகிறது.
பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த ரூபாய் நோட்டுகள் கள்ள ரூபாய் நோட்டுகள் என்பதை காத்தவராயனால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லையாம். இதுகுறித்து அவா் செஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...