நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயிலில் அடிபட்டுவட மாநிலத் தொழிலாளி பலி

 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் அருகே ரயிலில் அடிபட்டு வட மாநிலத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் அருகே ரயிலில் அடிபட்டு வட மாநிலத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் அஜக்குமாா் மகன் அனில்குமாா்(40). இவா், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் அருகே டி.தேவனூரில் உள்ள அரிசி ஆலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

திங்கள்கிழமை காலை அந்தப் பகுதியில் உள்ள ரயில் பாதையில் அனில்குமாா் சடலமாகக் கிடந்தாா். விழுப்புரம் ரயில்வே போலீஸாா் அங்கு விரைந்து சென்று விசாரித்தனா். மதுபோதையில் ரயில் பாதையை கடந்தபோது அனில் குமாா் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து, ரயில்வே போலீஸாா் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.