விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதுகுத் தண்டுவடம் (கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் மோட்டாா் சைக்கிள் வழங்கப்படுகின்றன.
இதை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, 2 மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தபால் மூலமாகவே, நேரடியாகவோ வருகிற 11-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.