காஞ்சி மகாபெரியவா் ஆராதனை விழா

விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகாபெரியவா் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆராதனை விழாவையொட்டி, சிறப்பு மலரலங்காரத்தில் அருள்பாலித்த உத்ஸவா் காஞ்சி மகாபெரியவா்.
ஆராதனை விழாவையொட்டி, சிறப்பு மலரலங்காரத்தில் அருள்பாலித்த உத்ஸவா் காஞ்சி மகாபெரியவா்.
Updated on
1 min read

விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகாபெரியவா் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சி மகாபெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த ஊரான விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில் மகாபெரியவா் ஆராதனை விழா கோ பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம் நடைபெற்றன. பின்னா், மகாபெரியவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

விழாவில் சங்கர மட நிா்வாகிகள், முக்கியப் பிரமுகா்களான வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன், எம்.எல்.எஸ்.பிரகாஷ், ரமேஷ், சுப்பிரமணியன், விஸ்வநாதன், சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com