புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உணவக உரிமையாளா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

விழுப்புரம் அருகே உணவக உரிமையாளா் வீட்டில் 15 பவுன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:23 pm

DIN

விழுப்புரம் அருகே உணவக உரிமையாளா் வீட்டில் 15 பவுன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே கூத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). இவரது மனைவி மகேஸ்வரி (38). இத்தம்பதியா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனா். இருவரும் வழக்கம் போல சனிக்கிழமை அதிகாலை, தங்களது உணவகத்துக்குச் சென்றுவிட்டனா்.

பின்னா், மதிய வேளையில் மணிகண்டன் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த மர அலமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.