ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல்லிக்குப்பம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு தொடக்கம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட சித்த மருத்துவா் கோ.ராஜகுமாரன் தலைமை வகித்து, சித்தா பிரிவை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா் (படம்). பின்னா் அவா் கூறியதாவது: ஆயுஷ் ஆரோக்கிய மையம் மூலம் கடலூா் மாவட்டத்தில் 46 மருத்துவமனைகளில் சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 47-ஆவது சிகிச்சைப் பிரிவாக நெல்லிக்குப்பம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இயங்கும். இங்கு தினசரி கபசுரக் குடிநீா் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட தலைமை மருத்துவமனை ஆயுஷ் பிரிவு மருத்துவா்கள் பி.மீனாட்சி, எஸ்.செந்தில்குமாா், ஸ்ரீ.கணேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். சித்தா பிரிவு மருத்துவா் எஸ்.கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.