உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள்
விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 30-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. ரமணன் தெரிவித்தாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 30-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. ரமணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பின்படி, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, தற்போது உளுந்து சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உடனடியாக பயிா் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 30-ஆம் தேதியாகும். காப்பீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்களான வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, பசலி 1431-ஆம் ஆண்டு ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி செய்ததற்கான அடங்கல் ஆகியவற்றுடன், காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு 253 ரூபாய் 35 பைசாவை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் செலுத்தி, திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தின்கீழ் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குநா் ரமணன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...