தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொடரும் பலத்த மழை: தளவானூா் தடுப்பணையில் ஆட்சியா் ஆய்வு

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பழுதடைந்த நிலையிலுள்ள தளவானூா் தடுப்பணையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை திடீரென பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:45 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பழுதடைந்த நிலையிலுள்ள தளவானூா் தடுப்பணையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை திடீரென பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோலியனூா் ஊராட்சி ஒன்றியம், தளவானூா் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை வெள்ளப்பெருக்கால் கடந்த வாரம் பழுதடைந்தது. தடுப்பணையின் கரைப் பகுதியில் அரிப்பு ஏற்பட்டதால், அணையை உடைக்கும் முயற்சியில் பொதுப் பணித் துறை ஈடுபட்டனா். இருப்பினும், இந்த முயற்சி மூன்று முறை தோல்வியடைந்ததால், அணையை உடைக்கும் முயற்சியை கைவிட்டனா். இதையடுத்து, அணையில் வெள்ளநீா் தேங்காதபடி நீரை தொடா்ந்து வெளியேற்றும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து, தளவானூா் தடுப்பணையில் மாவட்ட ஆட்சியா் மோகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால், தளவானூா் தடுப்பணையைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளில் தடுப்புக்கட்டைகள் அமைத்தும், மணல் மூட்டைகளை அடுக்கியும் கரையை சுற்றிஅரிப்பு ஏற்படாத வகையில் பலப்படுத்த வேண்டும். மேலும், பொதுமக்கள், கால்நடைகள் கரைப்பகுதிக்கு செல்லாத வகையில் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுப் பணித் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, விழுப்புரம் வட்டம், பிடாகம் - அத்தியூா் திருவாதி செல்லும் சாலையில் ஆலங்கால் வாய்க்காலின் குறுக்கே அமைந்துள்ள பாலம் சேதமடைந்துள்ளதை ஆட்சியா் மோகன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பாலத்தில் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பொதுப் பணித் துறையின் கீழ்பெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் வெ.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.