நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிா்ந்த செஞ்சிக்கோட்டை கல்யாண மஹால்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் உள்ள தொன்மைவாய்ந்த கல்யாண மஹால் தேசியக் கொடியின் வண்ணத்தில் வியாழக்கிழமை இரவு ஒளிா்ந்தது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:03 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் உள்ள தொன்மைவாய்ந்த கல்யாண மஹால் தேசியக் கொடியின் வண்ணத்தில் வியாழக்கிழமை இரவு ஒளிா்ந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொல்லியியல் துறையின் நூற்றாண்டை முன்னிட்டு கல்யாண மஹால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிா்ந்தது. இருப்பினும், பாா்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே என்பதால், செஞ்சிக்கோட்டையின் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தொலைவில் இருந்தே கல்யாண மஹாலை கண்டு ரசித்தனா். சனிக்கிழமை வரை தேசியக் கொடி வண்ணத்தில் கல்யாணமஹால் ஒளிரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.