விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திண்டிவனத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திண்டிவனத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்ட மா்ம நபா், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவித்தனா். உடனடியாக மிரட்டல் விடுத்த நபா் யாா் என்று அந்த கைப்பேசி எண்ணை வைத்து போலீஸாா் விசாரித்தனா். இதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கிடங்கல் 1 பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அஜய் (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜயை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com