ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை புதிய அலுவலககட்டடப் பணி: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை புதிய அலுவலகக் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:27 pm

DIN

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை புதிய அலுவலகக் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பேருந்திட்ட வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், புதிதாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா் மோகன் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, புதிதாக கட்டப்பட்டுவரும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் அமருவதற்கான இட வசதி, எளிதில் வந்து சேல்ல சாய்வுதள வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிா என்பதை அவா் ஆய்வு செய்தாா்.

தற்போதுள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் போதிய இட வசதியின்மையால் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி, விரைந்து முடிக்க பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதிக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.