ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம் அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய விதை நெல் உற்பத்தி தொடக்கம்

தமிழக அரசு விதைப் பண்ணைகளில் முதல் முறையாக விழுப்புரத்தில் பாரம்பரிய விதை நெல் உற்பத்தி தொடங்கப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:40 pm

DIN

தமிழக அரசு விதைப் பண்ணைகளில் முதல் முறையாக விழுப்புரத்தில் பாரம்பரிய விதை நெல் உற்பத்தி தொடங்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய நெல் விதைகளுக்கு விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இதையொட்டி, அரசு விதைப் பண்ணைகளிலும் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுமென்று சட்டப்பேரவையில் வேளாண்-உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

இந்த நிலையில், மாநிலத்திலேயே முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் தொடக்கிவைத்தாா். இந்தப் பண்ணையில் பாரம்பரிய நெல் விதைகளான தூயமல்லி 2 ஏக்கரிலும், செங்கல்பட்டு சிறுமணி 2 ஏக்கரிலும் வெள்ளிக்கிழமை முதல் நாற்று நடப்பட்டு இயற்கை முறையில் பயிரிடப்பட்டது. இந்த பாரம்பரிய நெல் விதைகளை விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் கொண்டு செல்லவும், இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு வழங்கவும் மாவட்ட ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.

இந்த பாரம்பரிய நெல் விதைகளை விளைநிலங்களில் இயற்கையான உரங்களை கொண்டு பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் அதிகப்படியான மகசூல் பெறமுடியும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

வேளாண் இணை இயக்குநா் ரமணன், வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.