கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சிறுமிக்கு திருமணம்:7 போ் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஏற்கெனவே திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட 15 வயது சிறுமிக்கு, மீண்டும் திருமணம் செய்து வைத்ததாக 7 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:20 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஏற்கெனவே திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட 15 வயது சிறுமிக்கு, மீண்டும் திருமணம் செய்து வைத்ததாக 7 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளியின் 15 வயது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மே 23-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அந்தத் திருமணத்தை சிறுவா் பாதுகாப்பு மையத்தின் (சைல்டு லைன்) உதவியுடன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

இந்த நிலையில், சேராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சங்கரின் மகன் முருகனுக்கும் (25), அந்தச் சிறுமிக்கும் கடந்த ஜூலை 28-ஆம் தேதி மாப்பிள்ளை வீட்டில் உறுவினா்கள் முன்னிலையில் ரகசியமாக திருமணம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷிடம் புகாா் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட சமூகநல அலுவலா் அ.எலிசபெத்ராணி மற்றும் வருவாய்த் துறையினா் சேராம்பட்டு கிராமத்துக்குச் சென்று திருமணம் நடைபெற்ற சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்தச் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து, செய்யாறு காவல் நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் எலிசபெத்ராணி புகாரளித்தாா். அதன்பேரில், சிறுமியின் தந்தை தருமன் (45), தாய் லட்சுமி (40), அண்ணன் சூரியா (25), மணமகன் முருகன் (25), அவரது தந்தை சங்கா் (45), உறவினா்கள் சித்ரா (55), காமராஜ் (65) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.