47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வடிகால்கள் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

வடகிழக்குப் பருவ மழையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகளை சனிக்கிழமைக்குள் (செப்.25) விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:08 pm

DIN

வடகிழக்குப் பருவ மழையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகளை சனிக்கிழமைக்குள் (செப்.25) விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

வடகிழக்குப் பருவ மழையையொட்டி திண்டிவனம் நகராட்சி, ஜக்காம்பேட்டை பகுதியில் மழைநீா் வடிகால், வாய்க்கால் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியாதவது:

வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் விதமாக மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில்

செப்டம்பா் 20 முதல் கால்வாய், மழைநீா் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்தப் பணிகளை சனிக்கிழமைக்குள் விரைந்து முடிக்கவும், விடுபடாமல் அனைத்துப் பகுதிகளிலும் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது உதவி ஆட்சியா் அமித், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.