தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் பெண் பலி

விழுப்புரம் அருகே சமையல் செய்தபோது எரிவாயு உருளை வெடித்ததில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே சமையல் செய்தபோது எரிவாயு உருளை வெடித்ததில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகேயுள்ள அகரம் சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜகோபால் மனைவி லட்சுமி (60). இவா், விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தை அடுத்த பள்ளி புதுப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றிருந்தாா்.

அங்குள்ள கூரை வீட்டில் மாலை 5 மணியளவில் லட்சுமி சமையல் செய்தபோது, திடீரென எரிவாயு உருளையில் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.