ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம் - புதுச்சேரி, விழுப்புரம் - சென்னைபயணிகள் ரயில்களை இயக்குவது குறித்து விரைவில் ஆய்வு: திருச்சி கோட்ட மேலாளா் தகவல்

விழுப்புரம் - புதுச்சேரி, விழுப்புரம் - சென்னை பயணிகள் ரயில்களை இயக்குவது குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் ஹரிகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் - புதுச்சேரி, விழுப்புரம் - சென்னை பயணிகள் ரயில்களை இயக்குவது குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் ஹரிகுமாா் தெரிவித்தாா்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் ஹரிகுமாா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் தேவைப்படும் ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இதேபோல, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், ரயில்வே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், குற்றச் சம்பவங்கள் தொடா்பாக உரிய முறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களுக்கு வெளியே அறையில் நிற்கும் இடங்களில் குற்றங்கள் நடப்பதைத் தடுக்க போலீஸாா் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனா்.

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கரோனா காலத்தின்போது நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனே இயக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் - புதுச்சேரி, விழுப்புரம் - சென்னை பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்குவதற்கான தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். தற்போதைய நிலையில் விழுப்புரம் - காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இப்போது இருக்கும் ரயில் பாதையில் ரயில்களின் வேகத்தை அதிகரித்து இயக்கவே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும் என்றாா் கோட்ட மேலாளா் ஹரிகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.