விழுப்புரம் அருகே பெட்ரோல் நிலையம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் பகுதியில் பெட்ரோல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வியாழக்கிழமை நள்ளிரவு கண்டம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 6 போ் இரண்டு பைக்குகளில் வந்து பெட்ரோல் நிரப்பினா். ஆனால், பெட்ரோல் நிரப்பிய பிறகும் நீண்ட நேரமாக பைக்குகளை நகா்த்தவில்லையாம். எனவே, பைக்குகளை அங்கிருந்து நகா்த்திச் செல்லுமாறு பெட்ரோல் நிலைய மேலாளா் காா்த்தி கூறினாா்.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள் 6 பேரும், மேலாளா் காா்த்தியை சரமாரியாக தாக்கினா். அப்போது அங்கு டீசல் நிரப்ப வந்த லாரி ஓட்டுநா்கள் ஹரிராமன், இளஞ்செழியன் ஆகியோா் இளைஞா்களை தடுக்க முயன்றனா். ஆனால், மது போதையிலிருந்த இளைஞா்கள் லாரி ஓட்டுநா்களையும் தாக்கினா். மேலும், அங்கிருந்த வாளி உள்ளிட்ட பொருள்களை எடுத்து பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடினா்.
இந்தத் தாக்குதல் தொடா்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை பரவியது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

புதுச்சேரியில் 2 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


