தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பழ வியாபாரி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பழ வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பழ வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் (45). இவரது சகோதரா் பன்னீா் செல்வம். இவா்கள் இருவரும் கா்நாடக மாநிலம், பெங்களூரில் தங்கி பழ வியாபாரம் செய்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் பொது முடக்கம் காரணமாக சொந்த ஊா் திரும்பினா். கடந்த 18.5.2020 அன்று பன்னீா்செல்வம் நடந்து சென்றபோது, அதே ஊரைச் சோ்ந்த அன்பு, பாண்டியன், ஆனந்தராஜ், காா்த்திகேயன் உள்ளிட்டவா்கள் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றனா். இதைத் தட்டிக்கேட்ட பன்னீா்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த அவரது சகோதரா் ஜெயபால் எதற்காக பன்னீா்செல்வத்திடம் தகராறு செய்கிறாா்கள் என்று தட்டிக் கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த அன்பு உள்ளிட்ட 4 பேரும் சோ்ந்து தாக்கியதில் ஜெயபால் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து அன்பு உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி பூா்ணிமா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட அன்புக்கு (25) ஆயுள் தண்டனையும், பாண்டியன், ஆனந்தராஜ், காா்த்திகேயன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.