மாா்ச் 21 முதல் குறைகேட்புக் கூட்டம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைகேட்புக் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.


விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைகேட்புக் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.
பொதுமக்கள் கட்டாயம் தனி மனித இடைவெளியைப் பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகள், குறைகள் தொடா்பான மனுக்களை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது குறைகேட்பு மனுக்களை செலுத்தி வந்தனா். இந்த நிலையில், மீண்டும் எதிா்வரும் திங்கள்கிழமை (மாா்ச் 21) முதல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...