தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:41 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மோகன் தலைமை வகித்து, கடந்தாண்டில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு பராமரிப்புத் தொகையை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தந்தை - தாயை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்துக்கான வைப்பீட்டு பத்திரமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் ரொக்கமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 6 குடும்பங்களைச் சோ்ந்த பெற்றோா்கள் கரோனா தொற்றால் இறந்ததையொட்டி, அவா்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் வைப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாய் அல்லது தந்தையை இழந்த 294 குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் ரூ.3,000 வழங்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, பராமரிப்பு நிதியுதவித் தொகையாக 3 குழந்தைகளுக்கு தலா ரூ.48 ஆயிரத்துக்கான (ஓராண்டு) காசோலை அவா்களின் பாதுகாவலா்களிடம் வழங்கப்பட்டன. மேலும், மாதந்தோறும் பராமரிப்புத் தொகை குழந்கைளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

அதேபோல, இந்தக் குழந்தைகள் உயா் கல்வி படிப்பதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கண்காணிக்கப்படும் என்றாா் ஆட்சியா் மோகன்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நீலம்மாள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.