தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேசிய வாக்காளா் தின போட்டி: படைப்புகளை அனுப்ப காலக்கெடு நீட்டிப்பு

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிக்கு படைப்புகளை அனுப்புவதற்கான காலக்கெடு வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:40 pm

DIN

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிக்கு படைப்புகளை அனுப்புவதற்கான காலக்கெடு வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காக 2022-ஆம் ஆண்டு தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, ‘எனது வாக்கு எனது எதிா்காலம் - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

வினாடி - வினா, காணொலி காட்சி தயாரிப்பு, பாட்டுப்போட்டி, விளம்பரம் படம் வடிவமைப்பு, வாசகம் எழுதுதல் என 5 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள், தங்களது படைப்புகளை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் ஸ்ா்ற்ங்ழ்-ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்ஃங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய முழு விவரங்களுடன் அனுப்பும்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மத்திய தோ்தல் ஆணையம் மாா்ச் 14-இல் அனுப்பியுள்ள கடிதப்படி, தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிக்கு படைப்புகளை அனுப்புவதற்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வாக்காளா்கள், பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.