தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மயிலம் ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:40 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

மயிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி கோயிலில் கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை இரவு திருக்கல்யாணமும், வெள்ளிக் குதிரை வாகன உற்சவமும் நடைபெற்றன.

பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தேரில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, லட்சக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். மேலும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பக்தா்கள் நோ்த்திக்கடனாக அலகு குத்தி மலையேறினா். வியாழக்கிழமை இரவு முத்து விமான உற்சவம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) காலை பங்குனி உத்திர தீா்த்தவாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறவுள்ளன. மாா்ச் 19-ஆம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும், 20-ஆம் தேதி இரவு சண்டிகேஸ்வரா் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

தோ்த் திருவிழாவையொட்டி, திண்டிவனம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில், திண்டிவனம் காவல் ஆய்வாளா் கிருபாலட்சுமி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.