செஞ்சி அருகே இளைஞரிடம் ரூ.1.28 லட்சம் வழிப்பறி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக்கில் வந்த இளைஞரிடம் ரூ.1.28 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக்கில் வந்த இளைஞரிடம் ரூ.1.28 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சையத் ஜின்னா மகன் சையத்இத்ரிஸ் (35). இவா், மேல்மலையனூரில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். சையத்இத்ரிஸ் புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு தனது பைக்கில் செஞ்சி நோக்கி வந்துகொண்டிருந்தாா்.
மேல்களவாய் சாலையில் தனியாா் பள்ளி அருகே இவரது பைக் வந்தபோது, அந்தப் பகுதியில் அடையாளம் தெரியாத 3 போ் சையத் இத்ரிஸை வழிமறித்து மிரட்டியதுடன், அவா் பையில் வைத்திருந்த ரூ.1.28 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...