ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கும் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் அடயாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் அடயாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனா்.

வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையிலும், இந்தப் பட்டியலை மேம்படுத்தும் வகையிலும் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இந்த முகாமில், விருப்பமுள்ள பொதுமக்கள் தாங்களாக முன்வந்து வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் எண் விவரங்களைத் தெரிவித்து, அவற்றை இணைத்துக் கொண்டனா். விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.