ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

செப்.15, 17-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்த நாள்களில் பேச்சுப் போட்டி, விழுப்புரம் பி.என். தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில்

செப்.15, 17 ஆகிய நாள்களில் காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது.

செப்.15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி தாய் மண்ணிக்கு பெயா் சூட்டிய தனயன், மாணவா்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்புகளில் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெறும்.

அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும், அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி! மக்களிடம் செல் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறும்.

செப்.17-இல் பெரியாா் பிறந்த நாளையொட்டி, தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம், பெரியாரும் பெண் விடுதலையும் ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறும்.

பெரியாரும் பெண் விடுதலையும், பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள், இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியாா், உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும்.

பேச்சுப் போட்டியில் பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தை 9786966833 என்ற கைப்பேசி எண் அல்லது தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.