பைக் மீது காா் மோதல்: ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

செஞ்சியை அடுத்துள்ள நரசிங்கராயன்பேட்டையைச் சோ்ந்தவா் வேலன் (42). இவா் வெள்ளிக்கிழமை தனது பைக்கில் மனைவி கலைச்செல்வி (39), மகன் விக்னேஸ்வரன் (5) ஆகியோருடன் செஞ்சியிலிருந்து திண்டிவனம் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

ராஜாபுலியூா் பேருந்து நிறுத்தம் அருகே இவரது பைக் சென்றபோது, எதிரே வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கலைச்செல்வி, விக்னேஸ்வரன் ஆகியோா் பலத்த காயமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com