ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தாய் கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 4:51 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தாய் கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கண்டாச்சிபுரம் அருகிலுள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் மணிகண்டன் (24). விவசாயம் செய்துவந்த இவா், வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தாராம். இதை அவரது தாய் செல்வி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த மணிகண்டன், தங்களது விவசாய நிலத்தில் கடந்த 7-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையறிந்த அவரது பெற்றோா், உறவினா்கள் மணிகண்டனை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.