ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:11 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி அடுத்த வி. சாத்தனூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் அ.சரவணன் (48). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக கட்டடத்தின் மேலிருந்து கீழே சரவணன் தவறி விழுந்தாா்.

உடனடியாக அவரை குடும்பத்தினா் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, சரவணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.