தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி பேரூராட்சி மற்றும் அண்ணமங்கலம் சங்கமம் கலை கல்லூரி இணைந்து விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:17 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி பேரூராட்சி மற்றும் அண்ணமங்கலம் சங்கமம் கலை கல்லூரி இணைந்து விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.

இந்தப் பேரணியை, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் பப்ளாசா தலைமை வகித்தாா். செயலா் ஜின்ராஜ், பொருளா் நவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயக்குனா் அமித்குமாா் வரவேற்றாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துகள் அடங்கி பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பேரணியில், பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம், கல்லூரி முதல்வா் ஹரிகுமாா், செஞ்சி காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டை ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.