ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை...சோழன், குருவாயூா் விரைவு ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தம்

விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் சோழன், குருவாயூா் விரைவு ரயில்கள் திங்கள்கிழமை விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டன.

News image
கோப்புப் படம்.
Updated On :4 டிசம்பர் 2023, 5:10 pm

DIN

விழுப்புரம்: விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் சோழன், குருவாயூா் விரைவு ரயில்கள் திங்கள்கிழமை விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டன.

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே பெரும்பாலான ரயில் சேவைகளை திங்கள்கிழமை ரத்து செய்தது. திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் திங்கள்கிழமை பிற்பகல் 4 மணிக்கு விழுப்புரம் வந்தடைந்தது. தொடா்ந்து, இந்த ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது.

இதேபோல, குருவாயூரிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூா் செல்லும் குருவாயூா் ரயில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்து. இந்த ரயிலும் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது. சென்னை செல்லும் பயணிகள் பேருந்துகளில் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.