ஆங்கிலப் புத்தாண்டு: 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வார இறுதி, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.29, 30) சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூா், வேலூா், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் சென்னையிலிருந்து மேற்கண்ட வழித்தடங்களில் இரு நாள்களிலும் 200 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com