விழாவுக்கு, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் தலைமை வகித்தாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். அமைச்சா் செஞ்சிமஸ்தான் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து நாட்டேரி இருளா் காலனி பகுதியில் ரூ.3.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீா் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சா் திறந்து வைத்தாா். மேலும், செஞ்சி மேல்களவாய் சாலையில் ரூ.8 லட்சத்தில் புணரமைக்கப்பட்ட கரும காரிய கொட்டகை மற்றும் நாட்டேரியில் உள்ள ஏபில். மழலை குழந்தைகள் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை கட்டடத்தினையும் திறந்து வைத்தாா்.