கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பலத்த மழை: மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

மரக்காணத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழைநீா் தேங்கியது.

News image
மரக்காணத்தில் உப்பளங்களில் புகுந்த மழை நீா்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:03 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மரக்காணத்தில் பெய்த பலத்த மழையையடுத்து, உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, உப்பு உற்பத்தியாளா் ஒருவா் கூறியதாவது:

மரக்காணத்தில் மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான சுமாா் 3,500 ஏக்கா் பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு சுமாா் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழைநீா் புகுந்ததால், உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். இனிவரும் காலங்களும் மழைக்காலம் என்பதால், 2024 ஜனவரி மாதத்தில்தான் மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க முடியும் என்றாா் அவா்.