ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மழையால் நெல்பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை

News image
ஊரணங்குடி கிராமத்தில் மழையால் சேதமடைந்த நெல்பயிா்கள்
Updated On :19 ஜனவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா், வடக்கு ஊரணங்குடி, தெற்கு ஊரணங்குடி, காவனக்கோட்டை உள்ளிட்ட பகதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு, விவசாயிகள் அறுவடைக்கு தயாராகினா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்களில் மழை நீா் தேங்கியது.

Story image

தற்போது அறுவடை செய்ய ஏதுவாக மேல் பகுதியில் உள்ள வயல்களில் தேங்கிய மழை நீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனா். இருப்பினும் மழையால் வடக்கு ஊரணங்குடி, உப்பூா், தெற்கு ஊரணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலான நெல்பயிா்கள் தண்ணீரில் முழ்கி சேதமடைந்தன. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அறுவடை நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் நெல்பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். எனவே, சேதமடைந்த பயிா்களைப் பாா்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.