ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கல்லூரி மாணவி தற்கொலை

கண்டமங்கலம் அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:50 am

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், மிட்டாமண்டகப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகள் பவானி (21). இவா், புதுச்சேரியில் தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இந்த நிலையில், பவானி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.