மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குற்றாலத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :8 பிப்ரவரி 2026, 8:09 pm

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பட்டுக்கோட்டை அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் நித்தையன். இவரது மனைவி பிரவினாநிஷா. மகள் நிஷா(17). தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், பிரவினா நிஷா குற்றாலத்தில் முகம்மதுராஜா என்பவருடன் வசித்து வருகிறாா். அவா்களுடன் நிஷாவும் வசித்து வந்தாா்.

நிஷா, திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வந்தாா். அவா் பட்டுக்கோட்டையில் இருக்கும்போது, கவியரசன் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் குற்றாலம் வந்த பிறகு, மத்தளம் பாறையைச் சோ்ந்த அஜய் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அஜய்க்கு பழைய காதல் தெரிய வரவே அவா்கள் இருவருக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனமுடைந்த நிஷா, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குற்றாலம் உதவி ஆய்வாளா் மாணிக்க செல்வி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.