ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 5 போ் மீது வழக்கு

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்பட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:10 pm

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்பட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் விஜயகாந்த் (23). கூலித்தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் விஜயகாந்த், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை விஜயகுமாா், தாயாா் சரோஜா, சிறுமியின் தந்தை வெங்கடேசன், தாயாா் செந்தாமரை ஆகியோா் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.