நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: மூன்று நாள்களில் 24,986 பேருக்கு மருத்துவப் பரிசோதனை

பென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் நடமாடும் மருத்துவ வாகனங்களை தொடங்கிவைத்த வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். உடன் எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.

Updated On :4 டிசம்பர் 2024, 7:53 pm

Din

பென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாள்களில் மட்டும் மாவட்டத்தில் 24,986 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பின்னா் வெள்ளநீா் நகரப் பகுதிகளில் வடிந்துவிட்டது. புகா்ப் பகுதிகளில் வெள்ளநீா் பெரும்பான்மையான பகுதிகளில் வடிந்து வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை சாா்பில், வட்டத்துக்கு 4 மருத்துவக் குழுக்கள் வீதம் 13 வட்டங்களுக்கு 52 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தக் குழுவினா் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு, மருத்துவச் சிகிச்சையளித்து வருகின்றனா். திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட தலா 4 மருத்துவக் குழுக்களும் புதன்கிழமை முதல் பணியைத் தொடங்கின.

கடந்த 2-ஆம் தேதி 104 இடங்களில் முகாமிட்டு 6,078 பேருக்கும், 3-ஆம் தேதி 116 இடங்களில் முகாமிட்டு 8,464 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையானவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை 132 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி, 10,444 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று நாள்களில் மொத்தம் 24,986 போ் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சைகள் தேவைப்பட்டவா்களுக்கு உடனடியாகவும் சிகிச்சையளிக்கப்பட்டன.

வட்டாரத்துக்கு 3 குழுக்கள் வீதம் குடிநீரின் குளோரின்அளவைப் பரிசோதித்து, தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொது சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நடமாடும் வாகனங்கள் தொடக்கம்: மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மருத்துவச் சிகிச்சைகளை வழங்கும் வகையில், 60 நடமாடும் வாகனங்களின் செயல்பாடுகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் முன்னிலை வகித்தாா். 60 நடமாடும் மருத்துவ வாகனங்களின் இயக்கத்தை வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் கூறுகையில், இந்த வாகனங்கள் மூலம் 146 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி, தேவையானவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் என்றாா்.

முன்னதாக, நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்கும் பணியையும் அமைச்சா் க.பொன்முடி தொடங்கிவைத்தாா்.

நிகழ்வுகளில் எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, கூடுதல் தலைமைச் செயலா்கள் க.மணிவாசன் (பொதுப் பணி), ஜெ.ராதாகிருஷ்ணன் (கூட்டுறவு, உணவு), கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநா் பி.பொன்னையா, போக்குவரத்துத் துறை ஆணையா் சுன்சோங்கம் சடக்சிரு, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.