சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்: 6 நாள்களில் 292 பேருக்கு பரிசோதனை

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 8:26 pm

கோவையில் ஹஜ் பயணிகளுக்கு கடந்த 6 நாள்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 292 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி சனிக்கிழமை முகாம் நிறைவடைந்தது.

இதில், பங்கேற்றவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலமாக உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல் திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 6 நாள்கள் நடைபெற்ற முகாமில் மொத்தம் 292 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.