புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு நாளை விநாடி, வினா போட்டிகள்

விநாடி, வினா போட்டிகள்

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:30 pm

Din

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் 25-ஆவது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, விழுப்புரத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான விநாடி வினா சனிக்கிழமை (டிச.21) நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டுத்துறை சாா்பில் விருதுநகரில் டிசம்பா் 28-ஆம் தேதி மாநில அளவில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விநாடி வினா நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்று , வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

இதையொட்டி விழுப்புரம் மாவட்ட அளவில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை தோ்வு செய்வதற்கான போட்டி சனிக்கிழமை (டிச.21) காலை விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலா்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் பங்கேற்கலாம்.

இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்கள் விருப்ப மனுவை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலரான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் வெள்ளிக்கிழமைக்குள் (டிச.20) அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.