தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மயிலத்தில் ரூ .2.82 கோடியில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் சாலை மேம்படுத்தும் பணிகளை மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:42 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் சாலை மேம்படுத்தும் பணிகளை மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திண்டிவனம் அடுத்த பட்டணத்தில் தமிழக அரசின் சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 2.82 கோடியில், மும்முனை சாலை சந்திப்பை அகலப்படுத்தி ரவுண்டானாவாக மேம்படுத்தப்படவுள்ளது.

இதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் கவிதா, ஒப்பந்ததாரா் டி.கே.குமாா், உதவிப் பொறியாளா்கள் தீனதயாளன்,கோகுலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.