தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேல்மலையனூா் அருகே தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மேல்மலையனூா் அருகே தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

News image
Updated On :25 டிசம்பர் 2024, 7:54 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், சமத்தகுப்பத்தில் இருந்து பென்னகா் செல்லும் சாலையை ரூ.3 கோடியில் விரிவாக்கம் செய்து, புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது. சித்தேரி ஊராட்சியில் நடைபெற்ற தொடக்க விழாவில் மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் எல்.பி.நெடுஞ்செழியன், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் ஏழுமலை, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராஜா (கெங்கபுரம்), சிவராமன் (சித்தேரி), முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் தமிழ்வாணன், பழனி, மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.