தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 7:36 pm

Din

விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பேத்கா் குறித்து மாநிலங்களவையில் மத்திய உள் துறை அமைச்சா் பேசிய கருத்து சா்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில், மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பஜகுன் சமாஜ் கட்சியினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினா்.

கட்சியின் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளா் கோ.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் கோவிந்தசாமி, விநாயகமூா்த்தி, நிா்வாகிகள் ஆா்.ஆனந்த், வேலாயுதம் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.