பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1.80 லட்சம் மோசடி : இளைஞா் கைது

புதுச்சேரி அடுத்த பாகூரில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1.80லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:15 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பாகூரில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1.80லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி, பாகூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி. இவா், சோரியாங்குப்பம் பிரதானச் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இதில், கடலூா் மாவட்டம், திருவந்திபுரம் அடுத்த ஓட்டேரியைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(30) என்பவா் கடந்த 10 மாதமாக வேலை பாா்த்து வந்தாா்.இவா் அவ்வப்போது விற்பனை தொடா்பான கணக்குகளை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் ரவிச்சந்திரன் பெட்ரோல் விற்பனையில் ரூ.1.80 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ரவிச்சந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.