சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Updated On :15 ஜூலை 2024, 9:30 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சென்னையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கோரியும், புதிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞா்கள் நலச் சங்கத் தலைவா் மு.பூபால் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் கோதண்டம் விஜயன், கிருபாகரன், சண்முகம், வழக்குரைஞா்கள் செல்வவிநாயகம், தமிழரசன், சுதாகா், விஜயபிரகாஷ், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.